இந்த பக்தையுடைய கணவர் சென்ற கார் ஒரு பயங்கர விபத்தில் அப்பளமாக நொறுங்குகிறது, ஆனால் அவர் உடலில் ஒரு சிறு கீறல் கூட விழவில்லை. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அன்று அவர் வீட்டை விட்டு கிளம்பும்போது 'உதி' பூசிக்கொள்ள மறந்துவிடுகிறார், ஆனால் சரியான நேரத்தில் ஞாபகம் வரவும், மீண்டும் வீட்டிற்குள் சென்று உதி பூசிக்கொண்டு தான் கிளம்புகிறார்.
-----------------------------------------
ஹரி ஓம். நான் வடுஜ் உபாசனா மையத்திற்கு கடந்த இரண்டரை வருடங்களாகத் தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கிறேன். அன்றாட வாழ்க்கையில் பாப்புவின் அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால் என்னுடைய கணவருக்கு ஜனவரி 7-ம் தேதி ஏற்பட்ட இந்த அனுபவத்தை நான் கண்டிப்பாக எல்லோரிடமும் சொல்லியே ஆகவேண்டும்.
என் கணவரும் ஒரு டாக்டர் தான், அவர் கடாவ் பகுதியில் பிராக்டிஸ் செய்கிறார். ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு அவர் எப்போதும் போல OPD-க்குக் கிளம்பினார். வடுஜ்-ஐத் தாண்டி ஒரு 5 முதல் 7 கிலோமீட்டர் தூரத்தில் ரோடு வேலை நடந்துகொண்டிருந்தது. அவர் எங்களுடைய Swift Dzire காரை ஓட்டிச் சென்றார். ரோடு வேலை நடந்துகொண்டிருந்த அந்த இடத்தில் திடீரென்று கார் சறுக்கிவிட்டது. அவர் பிரேக் போட எவ்வளவோ முயற்சி செய்தார், ஆனால் கார் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அடுத்து என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியவே இல்லை. அவர் கண்கள் இருட்டிவிட்டன, ஆனால் கார் பலமுறை உருண்டு பிரண்டது மட்டும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. கார் இரண்டு மரங்களுக்கு இடையில் சுமார் 8 முதல் 10 அடி தூரம் விமானத்தைப் போலப் பறந்து சென்றிருக்கிறது.
இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் என் கணவருக்கு ஒரு சின்னக் கீறல் கூடப் படவில்லை. கார் அப்படியே நொறுங்கிப் போய்விட்டது. காரில் மிஞ்சியது என்னவோ என் கணவர் அமர்ந்திருந்த சீட், பாப்புவின் போட்டோ மற்றும் கணபதியின் போட்டோ மட்டும் தான். காரின் எல்லா கண்ணாடிகளும் உடைந்துவிட்டன, கார் முழுவதுமாக நசுங்கிவிட்டது. Steering wheel அதன் இடத்திலிருந்து விலகிவிட்டது, டயர்களும் வெடித்துவிட்டன. சொல்லப்போனால் காரில் வேறு எதுவுமே மிஞ்சவில்லை. பாப்புவின் ஜப ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பின் பக்கக் கண்ணாடி வழியாக என் கணவர் வெளியே வந்தார். அப்போது சரியாக அவருக்குத் தெரிந்த ஒருவர் தன் காருடன் அங்கே நின்று கொண்டிருந்தார்.
நடந்ததெல்லாம் எங்களுடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இவ்வளவு பெரிய விபத்தில் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வருவதும், திடீரென்று தெரிந்த ஒருவர் அங்கே வந்து உதவி செய்வதும் அந்தச் சத்குருவின் கிருபை தான். அந்த நிலையிலும் காரின் Papers-ஐ எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை பாப்பு அவருக்குக் கொடுத்திருந்தார். அவர் தெரிந்த அந்த நபரின் காரில் ஏறி வடுஜ்-க்குத் திரும்பினார். ஒரு முன்னெச்சரிக்கைக்காக CT scan, Sonography மற்றும்
சில டெஸ்ட்டுகள் எடுத்தோம். எல்லா Reports-ம் மிக நன்றாக வந்தன. இவ்வளவு நடந்தும் அவர் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வரவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்காரர்களுக்கே ஆச்சரியம், அந்த இரண்டு மரங்களுக்கு இடையில் இந்த கார் எப்படிப் போயிருக்கும் என்று. இது நடக்கவே முடியாத ஒரு காரியம். காரின் நிலையைப் பார்த்துவிட்டு அந்த வழியாகப் போனவர்கள் எல்லாம், "இவ்வளவு பெரிய விபத்தில் காரில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தார்களா?" என்று தான் கேட்டார்கள். முடியாததை முடித்துக் காட்டுவது பாப்பு ஒருவரால் தான் முடியும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது எங்கள் எல்லோருக்கும் உதி பூசிக்கொள்ளும் பழக்கம் உண்டு. சரியாக விபத்து நடந்த அன்று தான் அவர் உதி பூச மறந்துவிட்டார், ஆனால் மீண்டும் வாசற்படிக்கு உள்ளே வந்து உதி பூசிக்கொண்டு தான் கிளம்பினார். அந்த உதி தான் அவரைக் காப்பாற்றியது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த விபத்து நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு, நான் என் OPD-யிலிருந்து வரும்போது இலைகள் சலசலக்கும் சத்தம் கேட்டது. நான் உதி பூசிவிட்டு தான் வந்திருந்தேன். என் மனதில் ஒருவேளை பாம்பாக இருக்குமோ என்று தோன்றியது. அப்படி நினைக்கும் போதே, ரோடு முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ஒரு பெரிய சாரைப்பாம்பு எனக்கு ஒரு அடி தூரத்தில் படம் எடுத்து நின்றது. அது வந்த வேகத்திலேயே மறுபக்கம் மறைந்துவிட்டது.
எனக்கும் என் கணவருக்கும் கெட்ட காலம் வந்திருந்தது. ஆனால் பாப்பு அந்தக் காலத்திற்கு முன்பே எங்களைக் காக்க வந்து நின்றுவிட்டார். காலம் வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது. காலத்தையே வெல்பவர் என் பாப்பு ஒருவரே. என் கணவர் போன் செய்து விபத்து பற்றிச் சொன்னதும் நான் "பாப்பு" என்று தான் அலறினேன். பாப்புவின் போட்டோவிற்கு முன்பு விழுந்து வணங்கி எல்லா பாரத்தையும் அவர் மேலேயே போட்டுவிட்டேன்.
மிக்க நன்றி அம்பக்ஞ பாப்பு, உங்களைத் தவிர யாராலும் இதைச் செய்ய முடியாது.
ஹரி ஓம் ஸ்ரீராம் அம்பக்ஞ
நாதசம்வித்

Comments
Post a Comment