இந்திய விடுதலைப் போராட்டத்தின் அறியப்படாத வரலாற்றின் ஒரு பார்வை - பாகம் 31

இந்திய விடுதலைப் போராட்டத்தின் அறியப்படாத வரலாற்றின் ஒரு பார்வை - பாகம் 31

லோகமான்ய திலகர் காலமான செய்தி அட்சராரீதியாகக் காற்றை விட வேகமாக இந்தியா முழுவதும் பரவியது. கி.பி. 1920-களில் தகவல் தொடர்பு சாதனங்கள் (communication tools) மிகக் குறைவாகவே இருந்தன, ஆனாலும் நமது அன்பிற்குரிய தலைவரின் மறைவுச் செய்தி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வெறும் இரண்டு மணி நேரத்தில் எட்டியது.

திலகரின் இறுதித் தரிசனத்திற்காக மக்கள் வெள்ளமெனத் திரண்டனர். இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தலைவர்களும் சாதாரண இந்தியர்களும் இறுதி ஊர்வலத்திற்காகக் கிளம்பினார்கள். ஆனால் போக்குவரத்து வசதிகள் (train, buses, planes) குறைவாக இருந்ததால், எல்லாராலும் சரியான நேரத்திற்கு வந்து சேர முடியவில்லை.

ஒரு British பத்திரிகையாளர் எழுதியிருப்பதைப் போல அந்த வர்ணனை இப்படி இருந்தது - 'இந்தச் செய்தி மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் முதலில் பரவியது, சர்தார் கிருஹாவிற்கு (Sardar Gruha) வெளியே மொத்த மும்பையே திரண்டு வந்தது போல இருந்தது. யாரால் யாரைக் கட்டுப்படுத்த முடியும்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல police officers-களால்கூடத் தங்கள் அழுகையையும் விம்மலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அழுது கொண்டிருந்தார்கள், லோகமான்ய திலகரின் பெயரைச் சொல்லி முழக்கமிட்டார்கள், தங்கள் முழு பலத்தையும் திரட்டி தரிசனம் நோக்கி முன்னேறிச் சென்றார்கள்.

கட்டுக்கடங்காத கூட்டத்தால் தரிசனத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் 'அன்று' சாதாரண இந்தியக் குடிமகன்கள்கூட British constables-களையோ அல்லது British வம்சாவளி உயர் பதவி police officers-களையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

தரிசனம் நிறுத்தப்பட்டதால் வேதனையடைந்த இந்திய மக்களின் கோபமும் ஆவேசமும் British officers-களுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

மும்பை மாகாண கவர்னர் Viceroy-ஐத் தொடர்பு கொண்டு நிலவரத்தை விளக்கினார். இறுதித் தரிசனத்திலிருந்தோ அல்லது இறுதி ஊர்வலத்திலிருந்தோ ஒரு இந்தியரைத் தடுத்தாலும் பெரும் கலவரம் வெடிக்கும் என்பதையும், இந்த ஆவேசமான கூட்டத்திற்கு முன்னால் British அரசு, British officers மற்றும் British வீரர்கள் கூடப் பலவீனமாகிவிடுவார்கள் என்பதையும் ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். துப்பாக்கிச் சூடு நடத்தினால் இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு 'மண்ணைக் கவ்வும்' நிலை ஏற்படும் என்று தெரிந்திருந்தது. இத்தகைய நிகழ்வுகளால் இந்திய மக்களுக்குத் தங்கள்

பலம் என்னவென்று தெரிந்துவிடும் என்றும், அதன் நீண்டகால விளைவு 'Swaraj' அமைப்பதற்கே வழிவகுக்கும் என்றும் அவர்கள் பயந்தார்கள்.

மேலும் 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்' என்ற திலகரின் சபதம், அவரது மறைவால் மிக விரைவில் உண்மையாகிவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

அதனால் தந்திரமான British அரசு திடீரெனத் தனது நிலையை மாற்றிக்கொண்டது. இந்தியத் தலைவர்களுக்கோ அல்லது மக்களுக்கோ கோபம் வரும்படி எதையும் செய்ய வேண்டாம் என்று மேலிடத்திலிருந்து கீழ் வரை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

British police officers மற்றும் sergeants மக்கள் இறுதித் தரிசனம் பெறவும் இறுதி ஊர்வலத்தின் போதும் உதவி செய்வதைப் பார்க்க முடிந்தது. இதில் அன்பு அல்லது அக்கறை இல்லை; மாறாக எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்தது. இது ஒரு பெரிய தந்திரமான நகர்வு.

லோகமான்ய திலகரின் இறுதித் தரிசனத்திற்காகப் பெரும் தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் வரிசை கட்டி நின்றனர். மும்பையிலிருந்த குஜராத்தி மற்றும் மார்வாரி சமூகத்தினர் மக்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் மற்றும் எலுமிச்சை சாறுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பல செல்வந்தர்கள், வரிசையில் மணிக்கணக்காகக் காத்திருந்த மக்களுக்காகத் தண்ணீர், பால் மற்றும் வாழைப்பழங்களுக்கு ஏற்பாடு செய்தார்கள். முக்கியமாக, இந்தச் செல்வந்தர்களோ அல்லது அமைப்புகளோ தங்கள் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ள board எதையும் வைக்கவில்லை.

அந்தக் கூட்டத்தில் மராத்தி, குஜராத்தி, மார்வாரி, உத்தரப்பிரதேசம், பெங்காலி, கன்னடம், தெலுங்கு, சீக்கியர் எனப் பல தரப்பட்ட இந்தியர்களின் கூட்டத்தைப் பார்த்து, அந்தந்த சமூகக் கூட்டங்களின் புகைப்படங்களை British போலீசார் எடுத்து Viceroy-க்கு உடனடியாக அனுப்பி வைத்தார்கள்.

லோகமான்ய திலகரின் உடல் அவருடைய ஆதரவாளர்களுக்கு வெறும் சடலமாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது லோகமான்யரின் சஞ்சீவன் சமாதி (Sanjivan Samadhi). ஒரு திவ்ய யோக நிலை, கர்மயோகத்தின் இறுதி நிலை.

அதனால் திலகரின் உடல் பத்மாசனத்தில் (Padmasana) அமர வைக்கப்பட்டிருந்தது. ந. சி. கேட்கர் (N. C. Kelkar) தெளிவாகச் சொன்னார் - 'மண்டாலே (Mandalay) போன்ற கொடுமையான சிறையில்கூட ஆங்கிலேயர்களுக்கு முன்னால் ஒருபோதும் தலைசாய்க்காத லோகமான்யரின் உடல் இறந்த பின்னும் படுக்க வைக்கப்பட மாட்டாது.'

இறுதி ஊர்வலம் பெரும் கூட்டம் இருந்தபோதிலும் அமைதியாகத் தொடங்கியது. ஆங்காங்கே, ஒவ்வொரு சந்திப்பிலும் திலகர் மீது மலர் தூவப்பட்டது. அனைத்துப் பொது கணேசோத்ஸவ (Ganesh festival) தொண்டர்களும் மிகப்பெரிய

மாலைகளுடன் ஆங்காங்கே நின்றிருந்தார்கள். திலகரின் 'சத்ரபதி சிவாஜி மகராஜ் கமிட்டி' (Chhatrapati Shivaji Maharaj Committee) தொண்டர்கள் வீதி வீதியாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெளிப்படையாக முழக்கமிட்டார்கள். இந்த விசேஷ செய்தியும் கவர்னரால் Viceroy-க்கும் Britain-ல் உள்ள Parliament-க்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

திலகரின் இறுதி ஊர்வலத்திலிருந்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் மௌலானா ஷௌகத் அலி போன்ற மிதவாதத் தலைவர்களுக்கு ஊர்வலத்தில் முக்கிய இடம் அளிக்கப்பட்டது. 'அவர்களது தலைமையில்தான் இறுதி ஊர்வலம் நடக்கிறது' என்று மக்களுக்குக் காட்டப்பட்டது. இந்த ஒரு விஷயத்தால் காந்திஜியின் முக்கியத்துவம் சாதாரண மக்களுக்கு மிகப் பெரியதாகத் தோன்றியது.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பெண்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. அக்காலத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்கள், இன்று வீட்டை விட்டு வெளியே வந்தது மட்டுமல்லாமல், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று முழக்கமிட்டார்கள் மற்றும் இறுதிச் சடங்குகளின் போதும் கலந்துகொண்டார்கள். தலை மழிக்கப்பட்ட விதவைப் பெண்கள்கூட அனைத்து விதிகளையும் தூக்கியெறிந்துவிட்டு அந்த மகா யுகபுருஷரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.

இந்த முழு காட்சியும் British அரசுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. திலகரின் இறுதி ஊர்வலம் இந்தியர்களை அதிக வலிமையுள்ளவர்களாகவும், பலம் பொருந்தியவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும் மாற்றிக்கொண்டிருந்தது. இதுதான் ஆங்கிலேயர்களுக்கு அதிக பயத்தைத் தந்தது. திலகர் மறைந்த செய்தியால் மகிழ்ச்சியடைந்த British அரசு, இறுதி ஊர்வலத்தின் வர்ணனைகளைக் கண்டு மிகுந்த எச்சரிக்கையடைந்தது.

Viceroy உடனடியாகச் செய்தி அனுப்பினார் - 'மக்கள் அனைவருக்கும் வசதியாக இருக்கும் வகையில், அனைத்து விதிகளையும் தளர்த்தி, லோகமான்ய திலகரின் இறுதிச் சடங்குகளை கிர்காவ் சௌபாட்டியில் (Girgaum Chowpatty) நடத்த வேண்டும்.' (அந்தக் காலத்து கிர்காவ் சௌபாட்டி பல ஏக்கர் பரப்பளவு கொண்டது.)

லோகமான்யரின் சிதை சாதாரணக் கட்டைகளால் இருக்கக் கூடாது' என்று உண்மையான இந்தியர்களான தொழிலதிபர்கள் முடிவெடுத்தார்கள். லோகமான்யரின் சிதை முழுமையாகச் சந்தனக் கட்டைகளால் உருவாக்கப்பட்டது.

ஆனால் ஒரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமான விஷயம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பலர் அவரவர் வசதிக்கேற்பச் சந்தனக் கட்டைகளைக் கொண்டு வந்தார்கள், அதனால் அங்கே சந்தனக் குவியல்களே உருவானது. சந்தன வியாபாரம் செய்த பார்சி (Parsi) சமூகத்தினர் வண்டி வண்டியாகச் சந்தனக் கட்டைகளைத் தானமாக வழங்கினார்கள்.

சனாதன வைதிக தர்மத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவராகவும், அதற்காகத் தேவைப்படும்போது ஆவேசமாகவும் செயல்பட்ட லோகமான்ய திலகரின் இறுதி

ஊர்வலம் ஒவ்வொரு பெரிய கோயிலின் முன்பும் நிற்க வேண்டியிருந்தது. ஏனெனில் அங்கிருந்த அர்ச்சகர்களும் பண்டிதர்களும் அனைத்து சாஸ்திரங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பெரிய மாலைகளுடன் திலகரின் பாதங்களுக்குப் பூஜை செய்தார்கள்.

பல தர்காக்களில் (Dargahs) திலகரின் உடல் மீது மலர்கள் தூவப்பட்டுப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

British கவர்னரின் கணக்குப்படி நான்கு லட்சம் ஆண்களும் ஒரு லட்சம் பெண்களும் அந்த இறுதி ஊர்வலத்திலிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 'லோகமான்ய திலகர் அமர் ரஹே, British ராஜ் முர்தாபாத், லாலா லஜபதி ராய் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டார்கள்.

திலகரைப் போலவே ஆவேசமான சுபாவம் கொண்ட லாலா லஜபதி ராய் கைகளுக்குத் தலைமை சென்றால், திலகரின் தீவிரவாதக் குழுவும் புரட்சியாளர்களும் வெற்றி பெறுவார்கள்' என்று Viceroy கருதினார். அதனால் லாலா லஜபதி ராயை ஒதுக்கிவிட்டு, திலகரின் தீவிரக் கருத்துகளின் செல்வாக்கைக் குறைக்க British அரசுக்கு இணக்கமான ஜவஹர்லால் நேருவைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, காந்திஜியை முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் முதல் உலகப் போரின் போது திலகர் ராணுவத்தில் சேருவதை எதிர்த்தார், ஆனால் காந்திஜி அதை ஆதரித்தார்.

திலகரின் சிதை தொடர்ந்து ஏழு நாட்கள் எரிந்து கொண்டிருந்தது, ஏனென்றால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள், சந்தனக் கட்டைகளைச் சமர்ப்பித்துக் கொண்டே இருந்தார்கள். பிற்காலத்தில் காந்திஜியின் தலைமை நிலைபெற்றது, ஆனால் அதன் சக்தி திலகரின் உழைப்பிலிருந்துதான் உருவானது.

(கதை தொடரும்)

Comments